நாட்டில் ஏற்படும் தீ விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பு, சொத்து இழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பையும் குறைப்பதற்காக தீயணைப்பு சேவைகளுக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்துவதில் பிரதி அமைச்சர் ருவன் செனரத் அவர்கள் தொடர்ந்து கூடிய கவனம் செலுத்தி வருவதுடன் கடந்த சில நாட்களில், உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தீயணைப்புத் துறைகளின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், மாவட்ட தீயணைப்புத் துறைகளில் உள்ள மனித வளப் பற்றாக்குறை, தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் நீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக சேவைகளை வழங்குவதில் ஏற்படும் கடுமையான சிரமங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். மேலும் 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சேவை அமைப்பொன்று ஸ்தாபிக்கப்படாமல் இருந்தமை, சேவையில் சிக்கல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்துள்ளது என்றும் இந்தக் கலந்துரையாடலின் போது அடையாளம் காணப்பட்டதுடன், தேசிய திட்டத்தைத் தயாரிக்க தீயணைப்பு சேவை அதிகாரிகளின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் யோசனையின்படி, சமீபத்திய வரலாற்றில் நாட்டின் தீயணைப்புத் துறைகளின் சேவை அதிகாரிகளுடன், அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்கேற்புடன் நடாத்தப்பட்ட ஒரே ஒரு கலந்துரையாடல் இது என்றும் மேலும் பங்கேற்ற பிரதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த வாரம், ஆஸ்திரேலியாவில் உள்ள உயரமான கட்டிடங்கள் உட்பட உயரமான வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் உலகத் தரம் வாய்ந்த தலைவராகவும், உலகின் முதல் 1% விஞ்ஞானிகளின் பட்டியலிலும் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் பிரியான் மெண்டிஸ் அவர்கள் மற்றும் தீ பாதுகாப்பு மற்றும் தரம் வாய்ந்த கொன்கிறீட் தொழிநுட்பத்தில் புகழ்பெற்ற நிபுணரான மொரட்டுவா பல்கலைக்கழகத்தின் கலாநிதி பசிந்து வீரசிங்க அவர்கள் உள்ளிட்ட தீயணைப்பு பாதுகாப்பு பொறியியல் விஞ்ஞான சங்கத்தின் (SFPE – Society of Fire Protection Engineering) இலங்கை கிளையின் பிரதிநிதிகள் குழுவுடன் இது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இவ் விடயத்தில் அவர்களின் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்வதுடன் இது தொடர்பாக அவர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைளைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் இக் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
கலந்துரையாடலின் போது இலங்கையில் தீ பாதுகாப்பு விதிமுறைகளை சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தினையும் மற்றும் தீ பாதுகாப்பு பொறியியல் விஞ்ஞானத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து இவ் அடிப்படைக் கருத்துக்களின் அடிப்படையில் இந்த விவாதம் தொடர்ந்தது. முதலாவதாக, இவ் விடய தலைப்பின் தற்போதைய நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. அங்கே இலங்கையில் CIDA தீயணைப்பு விதிமுறைகள் (2018) படி தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறைகள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், அவற்றின் நோக்கம் மட்டுப்படுத்தப்படக்கூடாது, மேலும் கருத்திட்டம் அல்லது கட்டுமானத்தின் தன்மை அல்லது தொடர்புடைய விடயத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதுடன் அத்தகைய தீர்மானங்களை எடுக்க இந்த விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற தகுதிவாய்ந்த பொறியாளர்கள் (தீயணைப்பு பொறியாளர்கள்) (Fire Engineers) இல்லாதது உள்ளிட்ட பின்வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டில் முதலீடுகளை செய்யும்போது இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் மேலும் அவை புதுப்பிக்கப்படாததன் காரணத்தால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய சாதகமற்ற நிலைமைகள் குறித்து இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது இவ் விடயம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று மேலதிக பட்ட படிப்புக்களைப் பயின்று வந்துள்ள பல படித்த பட்டதாரிகள் மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருப்பதாக கலாநிதி பசிந்து வீரசிங்க அவர்களால் இக் கலந்துரையாடலில் கூறப்பட்டது. எதிர்காலத்தில் அப் பட்டதாரிகளை இதில் ஈடுபடுத்தி இது தொடர்பாக ஒரு பயிற்சிப் பட்டறையும் நடாத்தி மேலும் இந்த விடயத்திற்கான சரியான கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளைப் பெறுவதற்கான வழிமுறையைத் தயாரிப்பதற்கான எதிர்காலத் திட்டம் மற்றும் அங்கீகாரம் (Accredited) பெற்ற ஆய்வகத்தை நிறுவுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பிரதி அமைச்சரின் ஆலோசனை என்னவெனில் இந்த வேலைத் திட்டத்தை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் மூலம் முன்னெடுத்துச் செல்வதற்கு, ஒன்றிணைந்து தீயணைப்புத் துறைகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தீயணைப்பு கட்டுப்பாடு மற்றும் தீ தடுப்பு இரண்டும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், இந்த நிபுணர்கள் குழுவின் கருத்துகள் மற்றும் இந்த நடவடிக்கைகளில் நடைமுறையில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறைகள் போன்ற அனைத்து தொடர்புடைய துறைகளின் கருத்துகளுடன் இதை ஒரு பரந்த விவாதத்திற்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திரு. ருவன் செனரத் மேலும் கூறினார்.
இக் கலந்துரையாடலின் போது கலனத்தில் கொள்ளப்பட்ட விடயங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு முதன்மையாக தயாரிக்கப்பட்ட அணுகுமுறைத் திட்டங்களைக் கொண்ட வரைவை பேராசிரியர்கள் உட்பட அவரது குழுவினரால் பிரதி அமைச்சருக்கு வழங்கப்பட்டது. மேலும் அவரும் அவரது குழுவும் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். ஆனால் அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதி அமைச்சரிடமிருந்து அவர்கள் முதன்முறையாகப் பெற்ற இந்த வாய்ப்பும், இது தொடர்பாக அவரது வலுவான ஆர்வமும் அக்கறையும் அவர்களால் சிறப்பாகப் பாராட்டப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலுக்காக மேலும் அமைச்சகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். திரு. ஆலோக பண்டார அவர்கள், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பி.எம்.ஏ. தயானந்தா அவர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி. மகேஷிகா கொடிப்பிலி ஆரச்சி அவர்கள் மற்றும் அமைச்சின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரிவின் நிர்வாகம் மற்றும் பயிற்சி மேலதிக செயலாளர் திரு. வசந்த ஆரியரத்ன அவர்கள், உள்ளிட்ட அதிகாரிகளும் தீயணைப்பு பாதுகாப்பு பொறியியல் விஞ்ஞான சங்கத்தின் திரு. ஷமிந்த என். இந்திகஹமடித்த அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இதில் இணைந்தனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன் கலந்துரையாடல்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், இந்த விடயங்களை நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் தலைமை தீயணைப்பு அதிகாரி திரு. பீ.டீ.கே.ஏ. வில்சன் அவர்கள் பாராட்டினார். தீயணைப்பு துறைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் அத்துடன் தீயணைப்பு வீரர்களுக்கான தொழில்முறை தகுதிகளை பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதில் செலுத்தப்படும் கவனம் மற்றும் இது தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய துறையினர்கள் கூட்டு மனப்பான்மையுடன் பணியாற்றுவதற்கும் அதற்கான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |