நோக்கம்

உள்;ராட்சி நிறுவனங்களின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்கள் அந்நிறுவனங்களின் பங்காளர்களாக இருப்பதனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரச நிதியினை பயன்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கான சேவையினை வினைத்திறனுடனும், பயனுள்ள முறையிலும் மேற்கொள்ளுவதன் மூலமும் உள்;ராட்சி நிர்வாகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

பிரிவின் பிரதான நோக்கங்கள்.

  • குறைந்த வருமானம் பெறும் உள்;ராட்சி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், தேவைப்படும் வருமானம அதிகரிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களைக் கண்டறிந்து கொள்ளல் மற்றும் அவற்றினைச் செயற்படுத்தலும்.
  • குறைந்த வருமானம் பெற்றுவரும் உள்;ராட்சி நிறுவனங்களினது பொது மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் சிரமங்களுக்குட்படும் பழைய கட்டிடத் தொகுதிகளை புதுப்பித்தமைத்தல் மற்றும் சேவைகளை வழங்குவதற்குரியவற்றினை புணரமைப்பதற்கான செலவுகளை மேற்கொள்ளல்.
  • முக்கியமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்குரிய விடயங்கள் அடங்கிய விபரங்களைத் தயாரித்து அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்காக அறிக்கையினை தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தல்
  • திட்டங்களைச் செயற்படுத்தல் மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை மதிப்பிடுதல்

 

செயற்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள்.

  1. உள்;ராட்சி நிறுவனங்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் (முன்னேற்றம்)
  2. பிரதேச சபையினை வலுவூட்டும் வேலைத்திட்டம் (மீண்டெழும் செலவுகள்)

இப்பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏனைய செயற்பாடுகள்.

உள்;ராட்சி நிறுவனங்களிலுள்ள பிரiஐகளுக்கான விஞ்ஞாபனம் தயாரிப்பதற்கான பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

  1. உள்;ராட்சிப் பிரஜைகளுக்குரிய திருத்தியமைக்கப்பட்ட பிரஜைகள் விஞ்ஞாபனத்தினை அறிமுகப்படுத்தல்.
  2. பிரஜைகள் விஞ்ஞாபனம் உள்ளடக்கிய கையேட்டினை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

கருத்திட்டம் தேசிய நிதி

1. உள்ராட்சி நிறுவனங்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டம் (நிதி)

 நோக்கம்: நகரமயமாக்களுடன் கூடிய மாற்றங்கள் ஏற்படுத்துமிடத்து பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதே போல் அந்நிறுவனங்களால் வழங்கப்படும் பொது சேவைகளின் தரத்தினையும் மற்றும் பயன்பாடுகளையும் மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு உள்;ராட்சி நிறுவனங்களின் அதிகார எல்லைகளுக்குள் உட்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தேவையின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அந்த உள்;ராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளல்.
பிரதான செயற்பாடுகள்:
  • பிரஜைகள் குடிநீர் திட்டங்களை நிறுவுதல்
  • சந்தை வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
  • சுற்றுலா கவர்ச்சிக்குரிய இடங்களுக்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
  • பொது மலசலகூட வசதிகளை அபிவிருத்தி செய்தல்
  • மயான இடங்களை அமைத்தல்
  • போசனசாலை மற்றும் சொகுசான தரிப்பிட மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல் செயற்படுத்தப்படும் பிரதேசம்: அனைத்து உள்;ராட்சி நிறுவனங்களும் (341) 2024 நிதி ஒதுக்கீடு.
  • 2024ம் வருடத்திற்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ.438 மில்லியன் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பின்வருமாறு பெற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2022ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து உண்மையில் முடிக்கப்பட்ட திட்டங்களை நிவர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படல்.
  • 2023ம் ஆண்டின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியுடன் செயற்படுத்துவதற்கு வழிநடத்தப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றி மிகுதி வேலைகளை செய்து முடித்தல்.
  • 2024ம் ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திட்டங்களைச் செயற்படுத்தல்.