உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரிவின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ் அவர்களின் தலைமையில் சர்வ மத பிரார்த்தனைகளுடன் சனவரி முதலாம் திகதி கொழும்பு 2 யூனியன் பிளேஸ் அலுவலகத்தில் நிகழ்ந்தது.
அதனையடுத்து அமைச்சின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உறுதிப் பிரமாணம் வழங்கினர். உறுதிப்பிரமாணமானது சிங்களம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. அதன்பின் கௌரவ அமைச்சர், கௌரவ இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உரை நிகழ்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்
அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேனீர் விருந்துடன் இவ்வைபவம் இனிதே நிறைவுற்றது.